லாரி- தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து… ஓட்டுநர்கள் 2 பேர் உயிரிழப்பு !

உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி -சென்னை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து எதிரே வந்த லாரியில் மோதியதில் ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த கோர சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று இரவு விபத்தில் சிக்கிய பேருந்து சென்னையிலிருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து பேருந்து எதிர் திசையை நோக்கி சென்றது. அந்த நேரத்தில் எதிர் திசையில் இருந்து திருச்சியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் ஆம்னி பேருந்து மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 20 பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

author avatar
murugan