தாத்தா பாட்டியிடம் வளர்ந்த மகளை வெளிநாடு அழைத்து செல்ல வந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

தாத்தா பாட்டியிடம் கேரளாவில் வளர்ந்த மகளை வெளிநாடு அழைத்து செல்ல வந்த தாய், மகள் இறந்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சி.

ஜீஷா என்பவர் தனது கணவர் மற்றும் மகளுடன் பிரிட்டனில் வேலை காரணமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர் நான்கு வயது பெண் குழந்தையை கேரளாவில் இருக்கக்கூடிய குழந்தையின் தாத்தா பாட்டியுடன் விட்டு விட்டு இவர்கள் பிரிட்டனில் வேலை செய்து வருகின்றனர். குழந்தையை பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என சில தினங்களுக்கு முன்பாக கேரளா வந்துள்ளார் ஜீஷா. அப்பொழுது கொரோனா விதிமுறை காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் மகளை காண ஆர்வமாக கேரளாவுக்கு சென்று உள்ளார். அங்கு அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது. ஏனென்றால், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தான் அவரது 4 வயது மகள் விளையாடிக் கொண்டிருக்கையில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக அங்கு சென்று அடைந்த பின்புதான் கூறியுள்ளனர்.
அவர் அங்கு சென்ற்றிருந்த போது அவரது பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த ஜீஷா தனது கணவருக்கு தகவல் தெரிவித்து இருந்தாலும், சிறுமியின் இறுதி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதால் அவரது கணவர் மற்றும் மகன் கூட இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காது. அந்த சம்பவம் உறவினர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் வெளி நாட்டில் இருக்கக்கூடிய ஜீஷாவின் கணவர் மற்றும் மகனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
author avatar
Rebekal