பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்…! என்ன காரணம்…?

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு இன்று போக்குவரத்து மாற்றம். 

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

திரு.வி.க. பாலம் வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எல்.பி சாலை வழியாக செல்லலாம். 7-வது அவென்யூ மற்றும் எம்ஜி ரோடு சந்திப்பில் இருந்து, அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் செல்ல அனுமதியில்லை. மேலும், எம்எல் பூங்காவில் இருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பேருந்து நிலையம் செல்ல மாநகர பேருந்துக்கு அனுமதி இல்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment