உத்திர பிரதேசத்தில் ஆசிரியரால் தாக்கப்பட்ட 7 வயது தலித் சிறுவன்

உத்திர பிரதேசத்தில், 2 ஆம் வகுப்பு தலித் மாணவனை அடித்து, தலையை தரையில் தேய்த்து துன்புறுத்திய ஆசிரியர்.

உத்திரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று(செப் 6) 2 ஆம் வகுப்பு படிக்கும் ஏழு வயது தலித் மாணவனை ஆசிரியர் அடித்ததாகவும், மாணவனின் தலையை தரையில் தேய்த்ததாகவும் கூறப்படுகிறது.

பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் மாணவனை அடித்து, தலையை தரையில் தேய்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவனின் வலது கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுவனின் மாமா புகார் அளித்துள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி யாதவ் கூறினார்.

author avatar
Varathalakshmi

Leave a Comment