மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை.! கைதான சகாயராணி வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம நபரக்ள்.!

பள்ளி மாணவன் விஷம் கொடுத்த கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சக மாணவியின் தாய் சகாயராணி வீட்டை மர்ம நபர்கள் சூறையாடியுள்ளனர். 

சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுத்துவிட கூடாது என்பதற்காக மாணயின் தாய், சக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த அந்த சம்பவம் தான்.

புதுசேரி, காரைக்காலில் தனியார் பள்ளியில் படிக்கும் பாலமணிகண்டன் எனும் மாணவனை தான் , அவனுடன் படிக்கும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா, பள்ளி காவலாளியிடம், தான் பால மணிகண்டன் உறவினர் என கூறி விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து இதனை பால மணிகண்டனிடம் கொடுக்க சொல்லி கொடுத்தனுப்பியுள்ளார்.

இதனை பள்ளி காவலாளி பாலமணிகண்டனுக்கு கொடுத்து, அவர் வாந்தி மயக்கம் எடுத்து, பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த விவகாரத்தில் சிசிடிவி வீடியோ வைத்து சகாயராணியை கைது செய்தது போலீசார். விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தற்போது புதுசேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சகாயராணி வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வேறு இடத்திற்கு சென்று விட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் சிலர் சகாயராணி வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். அந்த வீடு எதோ போர்க்களம் கண்டது போல இருக்கிறது.

இதற்கிடையில், சரியான சிகிச்சை கொடுக்காததால் தான் மாணவர் உயிரிழந்தார் என புகார் எழுந்ததை தொடர்ந்து மருத்துவ குழு அமைத்து அரசு மருத்துவமனையில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment