இன்று தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்களை திறக்க கோரி போராட்டம்…!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு வழிபாட்டு தளங்களை திறக்கக்கோரி அறப்போராட்டம் நடைபெறுகிறது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த  வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு முன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

இதனையடுத்து, தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் உள்ள கோவில்களில் 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு வழிபாட்டு தளங்களை திறக்கக்கோரி அறப்போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று வழிபாட்டு தளங்களை திறக்குமாறு போராட்டம் நடைபெற உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.