அரையிறுதிக்கு முன்னேறுமா நியூசிலாந்து.? இன்று இலங்கை அணியுடன் பலப்பரீச்சை.!

NZvsSL: நடப்பு ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ஆனது அரையிறுதியை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 40 போட்டிகள் முடிந்துள்ளது. இந்த போட்டிகளை தொடர்ந்து மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

அதன்படி, இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் 16 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 12 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகள் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளன. இதனால் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகளில் எந்த அணி இறுதிக்கு தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் 41வது லீக் போட்டியானது இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி, தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணியுடன் நேருக்கு நேர் மோத உள்ளது

இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், ரன்ரேட் அல்லது புள்ளிகளின் அடிப்படையில் அரைஇறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இதற்கு அடுத்ததாக உள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பட்சத்தில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்குச் செல்லும்.

தற்போது நியூசிலாந்து +0.398, பாகிஸ்தான் +0.036, ஆப்கானிஸ்தான் +0.338 என்ற அளவில் ரன்ரேட்டை வைத்துள்ளன. நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் நியூசிலாந்து 51 முறையும், இலங்கை 41 முறையும் வென்றுள்ளன. 8 போட்டிகள் முடிவில்லாமல், 1 போட்டி சமமாகவும் முடிந்துள்ளது.

இன்று போட்டி நடைபெறும் மைதானத்தை பார்க்கையில், பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானம் சிறிய அளவிலான எல்லைகளை கொண்ட ஒரு மைதானம் ஆகும். இது பேட்டிங் செய்யும் அணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சிறிய மைதானம் என்பதால் பவுண்டரிகள் அடித்து அதிக ரன்கள் எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இப்போது மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.