#TNAssembly: தஞ்சை தேர் விபத்து – பேரவையில் இரங்கல் தீர்மானம் முன்மொழிந்த முதலமைச்சர்!

தஞ்சை தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இன்று கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தஞ்சாவூர் அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவில் பவனி வீதி உலாவின் போது இன்று அதிகாலை 3.10 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் தேரோட்டம் முடிந்து, தேரினை திருப்ப முற்பட்டபோது தேர் கட்டுப்பாட்டினை இழந்து அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியதாக தெரிகிறது.

அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் சம்பவ இடத்திலேயே மோகன், பிரபாத், ராகவன், அன்பழகன், நாகராஜ், சந்தோஷ், செல்வம், ராஜ்குமார், சாமிநாதன், கோவிந்தராஜ், பரணி ஆகியன 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்துள்ள 16 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என விபத்து குறித்து முதலமைச்சர் விளக்கி கூறினார்.

அவர்களுக்கு தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் அளிப்பதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும் இப்பணிகளை மேற்பார்வையிடவும், துரிதப்படுத்திடவும் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் பிரதிநிகளும், அரசு உயர் அலுவலர்களும் சம்பா இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சத்தை முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

விபத்து நடைபெற்ற இடத்திற்கு இன்று நான் நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும், காயமடந்தை சிகிச்சை பெறுவோர்களையும் சந்திக்க இருக்கிறேன் என தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திடும் வகையில் பேரவையில் இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றி தருமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

அந்த தீர்மானத்தில், மிகுந்த துயரமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்