மக்களே ரெடியா…இன்று காலை 10 மணி முதல் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

இன்று முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்று சென்னைவாசி மக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலங்களில் இன்று (ஜூன் 11-ஆம் தேதி) முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும்.மேலும், நியாயவிலை கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும்.மேலும்,குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியும் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள்  தங்கள் குடும்ப அட்டையில் திருத்த மேற்கொள்ள விரும்பினால் அதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Comment