5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது ! ரூ.40,000 பரிசுத்தொகை ! தமிழக அரசு உத்தரவு

கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.2020 ஜனவரி 26-ஆம் தேதி குடியரசுத்தினத்தன்று காந்தியடிகள் காவலர் விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்குகிறார். விருதுடன் பரிசுத்தொகையாக தலா ரூ.40,000 வழங்கப்படும் என்று  தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.