சுதந்திர தினத்தன்று பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை! – அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

இந்தியாவில் 74வது சுதந்திரதின விழா, வருகிற ஆகஸ்ட் 15, வியாழன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்நிலையில் சில பள்ளிக்கூடங்களில் சுதந்திர தினத்தன்றும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும் சூழல் உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு, பள்ளிகளில் சுதந்திர தினத்தன்று சுதந்திர தின நிகழ்ச்சியை தவிர்த்து வேறு எந்த சிறப்பு வகுப்புகளும் நடக்க கூடாது என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.