திருவாரூர் இடைத்தேர்தல்:தள்ளி வைக்கக்கோரிய வழக்கு இன்று விசாரணை ..!

இன்று  திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் விசாரிக்க‌ிறது.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு :

ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும்.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மாரிமுத்து, ரத்தினகுமார் ஆகிய 3 பேர் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று   திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் விசாரிக்க‌ிறது.

Leave a Comment