27,000 ருபாய் மதிப்புள்ள செல்போனை திருடிய நண்பனை கொலை செய்த மூவர் கைது..!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளனர். பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பின் ஒருவரது செல்போன் காணாமல் போயுள்ளது. 27 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த போனை கூட்டத்திலிருந்த நண்பனே திருடியதால் அதைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.

ஆனால் அவன் திருப்பித் தர மறுத்ததால் மூன்று பேர் சேர்ந்து ஓட ஓட விரட்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மூன்று பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
Rebekal