டெல்லியில் தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு இதுதான் காரணம்…! – ஹரியானா முதல்வர்

தடுப்பூசிகளை டெல்லி அரசு விரைந்து செலுத்தி விடுவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார். 

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால் அங்கு தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறார். தடுப்பூசிகளை டெல்லி அரசு விரைந்து செலுத்தி விடுவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஹரியானாவில் ஒரே நாளில் 2 பேருக்கு தடுப்பூசி போட்டு, தடுப்பூசிகளை காலி செய்து விடலாம். ஆனால் மத்திய அரசிடமிருந்து வரும் தடுப்பூசிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் தினந்தோறும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஹரியானாவில் டெல்லியை விட அதிகமான மக்கள்தொகை உள்ளனர். டெல்லியின் மக்கள் தொகை இரண்டு கோடி, எங்கள் மக்கள் தொகை 2.90 கோடி. டெல்லிக்கு 51 லட்சம் தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளன, அதன்படி எங்களுக்கு 74 முதல் 75 லட்சம் டோஸ் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் எங்களுக்கு 58 லட்சம் டோஸ் மட்டுமே கிடைத்துள்ளது.மத்திய

அரசிடம் உள்ள தடுப்பூசிகளின் அடிப்படையில்தான் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் செய்து வருகிறார் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஹரியானா அரசும் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.