மதுரையில் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா” அமைக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
மதுரை தனியார் விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தெற்கு மண்டல மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்’ அமைக்கிறது. மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ₹600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மதுரையில் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா” அமைக்கப்படும் என்கிற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பு தென் தமிழகத்தில் தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான வித்து.’ என பதிவிட்டுள்ளார்.
“மதுரையில் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா” அமைக்கப்படும் என்கிற @CMOTamilnadu அவர்களின் அறிவிப்புக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அறிவிப்பு
தென் தமிழகத்தில் தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான வித்து. pic.twitter.com/Hq7AdX0JZN— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 16, 2022