திருநள்ளாறு அமமுக வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்.!

திருநள்ளார் தொகுதி அமமுக வேட்பாளர் தர்பாரண்யம் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற குறுகிய நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அவரவர் தொகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலை அடுத்த திருநள்ளார் தொகுதி அமமுக வேட்பாளர் தர்பாரண்யம் மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், அர்ஜுன் ராம் மேக்வால் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

அதேபோல் திமுகவிலிருந்து விலகிய விழுப்புரம் மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.ஜி.சம்பத் சென்னையில் சிடி ரவி முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்