இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு நிதி பற்றாக்குறை என்ற தகவல் பொய்யானது.இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை, அதற்கான நிதி உள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.