இறைவன் அருளால் மழை பெய்து வறட்சி நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது-அமைச்சர் ஜெயக்குமார்

இறைவன் அருளால் மழை பெய்து வறட்சி நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பருவமழை பொய்த்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. இறைவன் அருளால் மழை பெய்து வறட்சி நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விரிவுபடுத்தி அதனை கட்டாயமாக்குவோம்.
காங்கிரஸ் கட்சி 1967 க்குப்பிறகு யார் தோளிலாவது ஏறி சவாரி செய்வது வழக்கம் எதிர்க்கட்சியாக நாங்கள் திமுகவை பார்க்கிறோம். ஆனால் திமுக எங்களை எதிரியாக பார்க்கின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.