விஜய்யை சந்தித்து கதை கூறிய எச்.வினோத்?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

69-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாகவே விஜய் அறிவித்தும் இருந்தார். இந்நிலையில், விஜயின் கடைசி திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்து இருக்கிறது.

ஒரு பக்கம் தளபதி 69 படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தினை DVV எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

இது..ஹீரோ சோபா! இயக்குனர் சோபா! ‘LIC ‘ படக்குழுவினரை கலாய்த்த Viral Sofa Boy!

இதனையடுத்து, தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், தீரன், வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எச்.வினோத் விஜய்யை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறாராம்.  விஜய்யை சந்தித்து எச்.வினோத் அரசியல் கதையம்சம் கொண்ட கதை ஒன்றை கூறியிருக்கிறாராம்.

ஏற்கனவே, எச்.வினோத் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து கதை ஒன்றை கூறியிருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் அப்படியே கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே, இந்த சூழலில் தான் விஜய்யை சந்தித்து எச்.வினோத் கதை ஒன்றை கூறியிருக்கிறாராம். விரைவில் தளபதி 69 படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment