இந்து மதம் எனக்கூறுவது அவர்களுடைய விருப்பம் – மாஃபா பாண்டியராஜன்

திருவள்ளுவர் இந்து மதம் எனக்கூறுவது அவரவர்களின் விருப்பம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது.அந்த படத்தில் திருவள்ளுவர் விபூதி மற்றும் காவி உடை அணிந்து இருப்பது போன்று இருந்தது.இதற்கு விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,திருவள்ளுவர் இந்து மதம் எனக்கூறுவது அவரவர்களின் விருப்பம் .திருவள்ளுவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என அரசாணை ஏதும் இல்லை .திருவள்ளுவருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றும் திருவள்ளுவருக்கு சிலுவை, குல்லா போட்டாலும் எனக்கு பிரச்னை இல்லை என்று தெரிவித்துள்ளார்.