திமுக அமைச்சர்களின் பேச்சு வேதனை அளிக்கிறது – திருமாவளவன்

சில நேரங்களில் திமுக அமைச்சர்களின் பேச்சு, வருத்தத்தை அளிக்கும் வகையில் இருக்கிறது என திருமாவளவன் பேச்சு. 

சென்னை துறைமுக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்குத் தடை விதித்திருப்பதை வரவேற்பதாகவும், அதே நேரம் சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதி மறுத்திருப்பது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றிற்கு பதில் சொல்லும் வகையில், அமைச்சர்கள் சில பதில்களை தருகிறார்கள். அந்த பதில்கள் விமர்சனத்திற்குரியவையாக இருக்கின்றனர். சில நேரங்களில் திமுக அமைச்சர்களின் பேச்சு, வருத்தத்தை அளிக்கும் வகையில் இருக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment