பாலியல் புகாரளிக்க சென்ற 13 வயது சிறுமியை காவல்நிலையத்தில் வைத்து பலாத்காரம் செய்த அதிகாரி ..!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சைல்டு லைன் குழுவிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் காவல் நிலைய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரை சஸ்பெண்டு செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal