ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது – ராகுல்காந்தி நன்றி!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல்காந்தி அவர்களின் ட்விட்டர் கணக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது. அதற்காக , ட்விட்டரில் அவரை பாலோவ் செய்யும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திருந்த போதிலும் அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இருப்பினும், பிரதமர் மோடி அவர்களை ட்விட்டரில் பி தொடர்பவர்களை விட இந்த எண்ணிக்கை என்பது மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின், கணக்கில் அவரை 4.5 கோடி மக்கள் அவரை பின் தொடர்கிறார்கள். உலக அளவில் இது இரண்டாம் இடமாகும். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலகிலிலேயே அதிக பால்கோவா களை கொண்டுள்ளார்.

இந்தியாவில் மோடி முதலிடமும், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாம் இடத்தையும், முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி மூன்றாம் மற்றும் அமித்சா நான்காம் இடத்தில் உள்ளனர். தற்போது அந்த வரிசையில் ராகுல்காந்தி இணைந்துள்ளார்.