நியூஸிலாந்து அணியுடன் மோத போவது இங்கிலாந்து அணியா ?ஆஸ்திரேலிய அணியா?

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.

இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய நியூஸிலாந்து அணியுடன் வருகின்ற 14-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி போட்டியில் விளையாட முடியும்.

இந்த இரு அணிகளும் கடந்த 25 -ம் தேதி  லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் லீக் போட்டியில் மோதியது.இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் தான் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் சதம் அடித்தார்.மேலும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் ரன்கள் எடுக்காமல் வெளியேறினர்  என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்த அணி இறுதி போட்டிக்கு போகப்போகிறது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் குவிந்து உள்ளது.

author avatar
murugan