கீழடி பொருள்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் – திருமாவளவன்

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருள்களை, தமிழகத்தில் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் விசிக தலைவரும்,எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற விதிமீறல் திருமணம் கண்டிக்கத்தக்கது .இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் .
மேலும் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் பொருள்களை, தமிழகத்தில் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.