முதல் மூன்று நாளிலேயே வசூலில் சாதனை படைத்த ‘தி லயன் கிங்’!

இயக்குனர் ஜான் பெவ்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லயன் கிங்’. இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகினி, மனோபாலா, ரோபோ சங்கர் போன்ற தமிழ் நடிகர்களின் பங்கும் உண்டு.

இந்நிலையில், இப்படம் ஜூலை 19-ம் தேதி ரிலீசாகி உள்ளது. இந்தியாவில் ‘தி லயன் கிங்’ திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல்  படைத்துள்ளது. இந்தியாவில் முதல்வார இறுதியில் அதிகமாக வசூல் செய்த ஹாலிவுட் படங்களில் இப்படம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.