மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது…!

புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன். புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் காலமானார். சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், கட்டுரைத் தொகுப்புகள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், வானம் வசப்படும் புதினத்திற்காக சாகித்யா அகாடெமி விருதையும் பெற்றுள்ளார். பிரபஞ்சனின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில்  புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது.சன்னியாசிதோப்பு இடுகாட்டில் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.

Leave a Comment