சபரிமலை விவகாரம் ..!கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு …!

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் மலைக்கு செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல்  சபரிமலையை நிர்வாகித்து வரும் தேவசம் போர்டு சபரிமலை கோவிலுக்குள் செல்ல செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதியில்லை என்றும் மேலும் அந்த 2 பெண்களையும் வெளியேற உத்தரவிட்டது.
Related image
இன்று சென்ற ஆந்திர பெண் செய்தியாளர் கவிதா மற்றும் அவருடன் சென்ற பெண்ணும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநில தலைமை செயலாளர்களுக்கும் ,, டிஜிபி.க்களுக்கும்   அனுப்பியுள்ளது.அந்த கடிதத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 3 மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment