பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ,7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறேன் ,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இருட்டறையில் முடிவில்லாமல் வாடும் 7 பேரின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றைத் தோற்றுவித்திருக்கிறது.

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தினால், இட்டுக்கட்டிய பிரச்சனைகள் எழக்கூடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment