வீராங்கனை வீட்டில் கொள்ளை! சிசிடிவி கேமிரா மூலம் பிடித்தது போலீஸ்!

சென்னை சாந்தோம் டுமிங் லேன் எனும் பகுதியில் வசித்து வரும் கூடைப்பந்து வீராங்கனை அழகிய தமிழ் செல்வி என்பவரது வீட்டில் எல்.இ.டி டிவி, செல்போன், ஆடைகள் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை திருட்டு போயின.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்து அந்த திருடனின் முகத்தை தெளிவாக கண்டறிந்தனர். பிறகு அந்த நபரை தேடிவந்தனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் சந்தேகத்திற்கு உடனான நபர் சுற்றி திரிந்துள்ளார். அவனை மெரினா சுற்றுவட்டார மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்,

பிறகு அவன் மேல் சந்தேகம் வர பிறகு சிசிடிவி வீடியோவை ஆராய்ந்து, அவன்தான் என்பதை கண்டறிந்து, பிறகு அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவனிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. இங்கிருந்து பொருட்களை திருடி பிறகு பாண்டிச்சேரிக்கு தப்பி ஓடிவிட்டார். அங்கு அவரது கூட்டாளி சுலைமான் எனபவருடன் இணைந்து 22 செல்போன் திருடி விற்றுள்ளனர். போலீசார் இதனை விசாரித்து இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment