சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும் -அமைச்சர் எம்.சி.சம்பத்

சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத்  கூறுகையில் , மதுராந்தகத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைய இடம் கண்டறியப்பட வேண்டும்.இடம் கண்டறியப்பட்டால் சிப்காட் தொழிற் பூங்கா அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும்.முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.304 நிறுவனங்கள் மூலம் 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று  அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment