அத்திவரதரை பார்க்க விஐபி வரிசையில் பட்டா கத்தியுடன் வந்த 4 பேர் கைது போலீசார் தீவிர விசாரணை

அத்திவரதரை பார்க்க இதுவரை 41 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்து தரிசித்துள்ளனர் .இந்நிலையில் இன்று காலை சற்று கூட்டம் குறைவாகவே இருந்தது அதன் பின்பு கூட்டம் அதிகரித்துள்ளது .

இந்நிலையில் அத்திவரதரை பார்க்க விஐபி களுக்கு தனியாக வர விஐபி வரிசை உள்ளது இதில் அதற்க்கான அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வரமுடியும் .ஆனால் சற்றுமுன் பட்டாக்கத்தியுடன் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .நேற்று காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்கில் கத்தியைக்காட்டி சிலர் ஊழியர்களின் பணப்பையை பறித்து சென்றுள்ளனர் .இந்நிலையில் அவர்களை தேடி வந்த நிலையில் விஐபி வரிசையில் கத்தியுடன் 3வர்  பிடிபட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

author avatar
Dinasuvadu desk