வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் …!இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வடக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று  இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று  வெளியிட்ட அறிவிப்பில் , வடக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்  என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்று மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.
அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில்  மிதமான பனிமூட்டம் நிலவ வாய்ப்பு உள்ளது.அதேபோல் இன்று  ஒடிசாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள்ளது.

Leave a Comment