முதல் தீவிரவாதி ஒரு இந்து ! கமல் பேசியதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கமல் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட விசாரணையை  நவம்பர் 22-தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்து சேனா அமைப்பு சார்பாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கமல் பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இன்று விசாரணைக்கு இந்த வழக்கின் விசாரணையை  நவம்பர் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டது.