3 தீவுகள் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு….!!

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலுள்ள இருக்கும் மூன்று சிறிய தீவுகளின் பெயர்களை மாற்றம் செய்ய  மத்திய அரசு முடிவு செய்திருக்கின்றது.
அந்தமான் நிகோபர் தீவுகளில் ரோஸ் தீவு, நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு என்று மூன்று குட்டி தீவுகள் உள்ளன.இந்த மூன்று தீவுகளின் பெயர்களை மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதில் உள்ள ரோஸ் தீவினை  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நெயில் தீவினை ஷாகீத் த்வீப் தீவு என்றும் மற்றும்    ஹேவ்லாக்தீவினை  சுவராஜ் த்வீப் தீவு என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட  உள்ளதாக கூறப்படுகின்றது.
தீவுகளின் பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்  மத்திய உள்துறை அமைச்சகம் செய்துள்ளது.வருகின்ற 30-ம் தேதி அந்தமான் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அந்தமானில் நடைபெறும் நிகழ்ச்சியில் தீவுகளின் புதிய பெயரை அறிவிப்பார் என்று சொல்லப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment