20 தொகுதிகளுக்கு தேர்தலை அறிவித்து ஜனநாயகத்தை காக்க ஆணையம் முன்வர வேண்டும்…! ஜவாஹிருல்லா

மக்களின் பிரச்னைகள் குறித்து பேரவையில் குரல் எழுப்ப உரிய பிரதிநிதி இல்லாதது வேதனை என்று  மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது..ஏற்கனவே காலியாக உள்ள 2 தொகுதிகளை சேர்த்து இப்போது 20 தொகுதிகள் காலியாகி விட்டது.
இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில், 20 தொகுதிகளுக்கு தேர்தலை அறிவித்து ஜனநாயகத்தை காக்க ஆணையம் முன்வர வேண்டும். மக்களின் பிரச்னைகள் குறித்து பேரவையில் குரல் எழுப்ப உரிய பிரதிநிதி இல்லாதது வேதனை என்றும்  மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Leave a Comment