தீவிரவாதம் எங்கு தலை தூக்கினாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க முதல்வர் தயாராக உள்ளார் – அமைச்சர் சேகர் பாபு

தீவிரவாதம் எங்கு தலைத் தூக்கினாலும் முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு தயாராக உள்ளார் என சேகர் பாபு  பேட்டி.

அமைச்சர் சேகர்பாபு சென்னை முழுவதும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் பட்டாசு கழிவுகளையும், பழைய பொருட்களின் கழிவுகளையும் அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எதிர்மறை கருத்துக்கள் கொண்ட பாஜக முக்கிய தலைவர்களின் சிலர் என்னைத் தொடர்பு கொண்ட திருச்செந்தூரில்  மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார். ராணுவத்திற்கு நிகராக போர்க்கால அடிப்படையில் எந்த நிலையையும் சமாளிக்க சென்னை மாநகராட்சியை முதல்வர் தயார் படுத்தி வைத்துள்ளார். தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் பேரிடரை சமாளிக்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் கோவை கார்வெடிவிபத்து சம்பவம் குறித்து பேசிய அவர் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்று இருப்பவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் அதைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை.

தமிழகத்தில் மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் ஜாதி மத இன மோதல்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். தீவிரவாதம் எங்கு தலைத் தூக்கினாலும் முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கு தயாராக உள்ளார் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment