டெல்டாமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …!சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டாமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டாமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது .நாளை, நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது .தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment