தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்

தமிழ்நாடு தொலைநோக்கு 2023 திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்றும் சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்தார். பேரவையில் முதல் கூட்டத்தில் பேசிய ஆளுநர் திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தை திட்டம் மூலம் நலிந்த பிரிவினருக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் உள்ளிட்டவையும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசு பல்வேறு துறைகளில் விருதுகளை வென்று வருவதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை தமிழக அரசு பெருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment