மாநில மக்களுடைய ஆர்வங்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை-டி.ஆர்.பாலு

மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், காங்கிரஸ்  ஆட்சி காலத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது மாநில மொழிகளிலும், அகில இந்திய தேர்வுகளை எழுதலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால் தபால்துறை தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .மாநில மக்களுடைய ஆர்வங்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்று குற்றம்சாட்டினார் டி.ஆர்.பாலு.