பைபிள் மற்றும் குரானை பகவத்கீதையுடன் ஒப்பிட முடியாது – கர்நாடக கல்வித்துறை அமைச்சர்!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடர்ச்சியாக சர்ச்சை கிளம்பி வந்த நிலையில், இதனை அடுத்து கர்நாடகாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களை பள்ளிக்கு பைபிள் கொண்டு வர வேண்டும் என பெற்றோரிடம் அனுமதி கேட்டபோது புது சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக கல்வித் துறை அமைச்சர் வி சி நாகேஷ் அவர்கள் கூறுகையில், பைபிளும் குரானும் மதநூல்கள். மதத்தை நம்புபவர்கள் அந்தந்த மத நூல்களைப் படிக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் பகவத் கீதை மதத்தை பற்றி பேசவில்லை. வாழ்க்கை நடைமுறைக்குத் தேவையான குறிப்புகளை கூறுகிறது.

எனவே பைபிள் மற்றும் குரான் போன்ற பிற மத நூல்களுடன் பகவத் கீதையை ஒப்பிட முடியாது. சுவாமி விவேகானந்தர் மற்றும் சிலர் இயேசுவின் வாழ்க்கை முறைகளை கற்பித்தது போல நீங்கள் கற்பிக்கலாம். ஆனால் மாணவர்கள் மீது மத உரையை திணிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal