மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு! மாணவர்கள் அதிர்ச்சி!

மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரின் தலை துண்டிப்பு.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளியில், வரலாற்று ஆசிரியர் ஒருவர், முகமது நபியின் கேலி சித்திரங்கள் குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், ஆயுதங்கள் கொண்டு ஆசிரியரின் தலையை துண்டித்துள்ளார். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபரை சுட்டு கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து பிரான்ஸ் நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான் அவர்கள் கூறுகையில், ‘இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் துணை நிற்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.’

மேலும் இந்த தாக்குதல் குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தாக்குதல் நடத்திய மர்ம நபரிடம் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் இருந்தது, ஆயுதங்களாய் கீழே போடுமாறு உத்தரவிட்டோம். அனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர், அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதால், அவர் சுட்டு கொல்லப்பட்டார்.’ என தெரிவித்துள்ளார்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.