அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும்-அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அத்திவரதர் மீண்டும் காட்சி தரும்போதும் அதிமுகதான் ஆட்சியில் இருக்கும். திமுகவின் நினைப்பு பகல் கனவாகி வருகின்றது. வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது நிர்வாக வசதிக்காகவே. மாவட்டங்கள் பிரிக்கப்படுவது மக்களுக்கு நல்ல விஷயம் ஆகும்.

மயிலாடுதுறை மாவட்டமாக பிரிப்பது தொடர்பாக பரிசீலனையில் உள்ளதாக உதயகுமார் தெரிவித்துள்ளார் .செவிகொடுத்து கேட்டு செவிசாய்க்கும் அரசு தமிழகத்தில் உள்ளது .இது அண்ணா , எம் ஜி ஆர், ஜெயலலிதா பூமி. ஜாதிகள் இல்லையடி என்பதே அரசின் நிலை ஆகும்.

பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கைக்கு கனிமொழி வரவேற்றுள்ளது நல்ல விஷயம். செங்கோட்டையன் கருத்து குறித்து எனக்கு தகவல் இல்லை. நீட்டுக்கு காரணமே திமுகவும், காங்கிரசுமே. ரஜினிகாந்த் கூறிய கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம் என்று தெரிவித்தார்.