காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் அதிமுக அரசு தீர்த்து வருகிறது-அமைச்சர் ஜெயக்குமார்

காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தற்போது அதிமுக அரசு தீர்த்து வருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  எப்படியாவது அதிமுக ஆட்சி மீது சாயம் பூச வேண்டும் என்கிற நடவடிக்கையில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளார். வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று எதிர்க்கட்சிகள் செய்யும் பிரச்சாரம் என்றைக்கும் உண்மையாகாது.

திமுக ஆட்சியில் தான் நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு துரோகம் அழைக்கப்பட்டது . நடுவர் மன்றம் வேண்டும் என்று எம்ஜிஆர் காலத்தில் எழுதிய காலத்தை நாள் தான் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது, அதிமுக ஆட்சியில் செய்யப்படவில்லை.

காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தற்போது அதிமுக அரசு தீர்த்து வருகிறது. ஆனால் இதை எதிர்க்கட்சிகள் வேண்டும் என்று குறைகூறி வருகின்றனர் மனம் கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.