முன்கள பணியாற்றும் மருத்துவர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி!

கொரோனாவுக்கு எதிரான போரில் முன் நின்று பணியாற்றக்கூடிய ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்திற்கும் நன்றி என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுபடுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து நேற்று மருத்துவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், நெருக்கடியான இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் முன் நின்று களப் பணியாற்றக்கூடிய ஒட்டு மொத்த மருத்துவ சமூகத்தினருக்கும் நன்றி எனவும், நம் நாட்டில் முதல் கட்டத்திலேயே முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதால், இந்த இரண்டாம் அலையில் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

author avatar
Rebekal