அடடே… சிவாஜிக்கு வந்த சோதனையா….? இப்பிடி பண்ணிட்டாங்களே பிரேமலதா….

 எம்.ஜி.ஆர்-ன் பாடல்களை தான் விரும்பி பாடுவார் என்றும், அதற்கு உதாரணமாக சிவாஜியின் பாடலான ஒளி மயமான எதிர்காலம் பாடலை பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து கட்சி பிரச்சாரங்களும் மிக தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் சில குழப்பங்கள் நடந்து வருகிறது. வேட்பாளர்கள் பெயரை மாற்றி சொல்வது மற்றும் பிரதமர் பெயரை மாற்றி சொல்வது போன்ற குழப்பங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளின் திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கோட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், விஜயகாந்துக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், விஜயகாந்துக்கு தான் நடித்த பாடல்களை விட, எம்.ஜி.ஆர்-ன் பாடல்களை தான் விரும்பி பாடுவார் என்றும், அதற்கு உதாரணமாக சிவாஜியின் பாடலான ஒளி மயமான எதிர்காலம் பாடலை கூறியுள்ளார். இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment