டெண்டர் முறைகேடு ! அமைச்சர் வேலுமணி மீதான வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  • அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும்  நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் வேலுமணி மீதான புகார் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 23-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தது நீதிமன்றம்.