இன்று தெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்கிறார் தமிழிசை

இன்று தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை  பதவி ஏற்க உள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையை தெலுங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமனம் செய்வதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார்.மேலும் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை ஆளுநருக்கான நியமன ஆணையை பெற்றுக்கொண்டார்.  பின் தமிழிசை ஆளுநராக பதவி ஏற்கும் தேதி அறிவிக்கப்பட்டது.அதாவது செப்டம்பர் 8-ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தெலுங்கானாவின் ஆளுநராக தமிழிசை இன்று பதவி ஏற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிசைக்கு  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ். சவுஹான் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.