இன்று டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…!

இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்  பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

டெல்லி செல்லும் ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment