செஸ் ஒலிம்பியாட் : பட்டு வேஷ்டி சட்டையுடன் துவக்க விழாவுக்கு வந்திறங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.!

தமிழக பாரம்பரிய உடையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். 

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் துவக்க விழா தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்த விழாவிற்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு சட்டையுடன் வந்துள்ளார். அவரை விழா குழுவினர் வரவேற்று உள்ளனர். மேடையில் தமிழக பாரம்பரிய உடையில் அமர்ந்துள்ளார் தமிழக முதல்வர்.

அடுத்ததாக பிரதமர் மோடி விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வந்த பிறகு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவங்க உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment